ஜெயலலிதா நலம் பெற வேண்டி தேவர் நினைவிடத்தில் கருணாஸ் சிறப்பு பூஜை!
சென்னை: முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் பெற வேண்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் சிறப்பு பூஜை, அன்னதானம் நடத்துகிறார் நடிகரும் எம்எல்ஏவுமான கருணாஸ்.
முக்குலத்தோர் புலிப்படை என்ற அமைப்பின் தலைவரான கருணாஸ், கடந்த தேர்தலில் அதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்தில் நின்று வெற்றிப் பெற்றவர்.
சட்டசபையில் தனது பேச்சுத் திறமை காரணமாக முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்துக்கு உள்ளானவர்.
முதல்வர் ஜெயலலிதா கடந்த மூன்று வாரங்களாக உடல் நலமின்றி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், அவர் விரைவில் பூரண நலத்துடன் வீடு திரும்ப வேண்டும் என்று பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் சிறப்பு பூஜை நடத்துகிறார்.
இன்று நடக்கும் இந்த பூஜையில் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் மணிகண்டன், இராமநாதபுரம் மாவட்டம் அன்வர் ராஜா எம்பி, மாவட்ட செயலாளர் முனியசாமி, உள்ளிட்ட மாநில மாவட்ட ஒன்றிய நகர அஇஅதிமுக மற்றும் முக்குலத்தோர் புலிப்படை நிர்வாகிகள் மற்றும் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
இந்த பூஜையின்போது 500 பேருக்கு அன்னதானமும் வழங்கப்படுகிறது.