For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நிறைந்த அமாவாசை: அப்பல்லோ வாசலில் அம்மாவுக்காக திருவிளக்கு பூஜை, அன்னதானம்

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: முதல்வர் ஜெயலலிதா குணமடைய வேண்டி சென்னை அப்பல்லோ மருத்துவமனை முன்பு திரு விளக்கு பூஜை நடத்தப்பட்டதுடன் அன்னதானம் வழங்கப்பட்டது.

முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த மாதம் 22ம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பல்வேறு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

Special poojai held in front of Apollo hospital for Jaya

இந்நிலையில் அவர் குணமடைய வேண்டி அதிமுகவினர் மற்றும் மக்கள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்து வருகிறார்கள். அப்பல்லோ மருத்துவமனை வாசலிலும் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று நிறைந்த அமாவாசை என்பதால் அதிமுகவினர் மருத்துவமனை வாசலில் வெள்ளை பூசணிக்காயில் நெய் தீபம் ஏற்றி சிறப்பு பூஜை நடத்தினர்.

மேலும் மருத்துவமனை வாயிலில் திரு விளக்கு பூஜை நடத்தப்பட்டதுடன் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இது தவிர சைதாப்பேட்டையில் உள்ள அம்மா கராத்தே பள்ளி ஆசிரியர் தனசேகரன் தலைமையில் மாணவ-மாணவியர் மருத்துவமனை அருகில் முதல்வருக்காக சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.

English summary
ADMK men conducted special poojai for their ailing Amma in front of Apollo hospital in Chennai on sunday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X