For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

40 தொகுதிகளிலும் அதிமுக வெல்ல வேண்டும்.. 40 பாதிரியார்கள் சேர்ந்து பிரார்த்தனை!

|

சென்னை: அதிமுக லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெல்ல வேண்டும், முதல்வர் ஜெயலலிதா பிரதமராக உயர வேண்டும் என்பதை வலியுறுத்தி, 40 பாதிரியார்கள் சேர்ந்து சென்னையில் கூட்டாக பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

சென்னையில் நடந்த இந்த விசேஷ கூட்டுப் பிரார்த்தனையில் இறை பாடல்கள் பாடப்பட்டன, சிறப்பு ஜெபம் நடத்தப்பட்டது

அகில இந்திய கிறிஸ்தவர்கள் விடுதலை முன்னணி சார்பில் சென்னை பத்திரிக்கையாளர்கள் மன்ற அரங்கத்தில் இந்த சிறப்பு ஆராதனை ஜெப கூட்டம் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடந்தது.

Special prayer held for the victory of ADMK in all 40 seats

நிறுவனத்தலைவர் ராயல் டி.தேவக்குமார் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ, கலைராஜன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தென்சென்னை அதிமுக வேட்பாளர் டாக்டர் ஜெ.ஜெயவர்தன் கலந்து கொண்டார்.

40 பாதிரியார்களும் அனைத்து வேட்பாளர்களின் வெற்றிக்காக சிறப்பு ஜெபம் செய்ததுடன், இறைபாடல்களையும் பாடினர். பிஷப்புகள் டாக்டர் ஜான், டேவிட் மற்றும் கிறிஸ்டோபர் ஆகியோர் தென்சென்னை வேட்பாளருக்கு ஆசியும் வழங்கினர்.

English summary
A special christian prayer was held for the victory of ADMK in all 40 seats. 40 Christian priests partcipated in the prayer.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X