தென்மாவட்டங்களுக்கு 4 சிறப்பு பயணிகள் ரயிலை இயக்கிய தெற்கு ரயில்வே!
தென்மாவட்டங்களுக்கு 4 சிறப்பு பயணிகள் ரயிலை தெற்கு ரயில்வே இயக்கியுள்ளது.
சென்னை: தென்மாவட்டங்களுக்கு இன்று 4 சிறப்பு பயணிகள் ரயிலை விழுப்புரம், விருத்தாசலத்தில் இருந்து தெற்கு ரயில்வே இயக்கியுள்ளது.
தென்மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரயில்கள் அனைத்தும் விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, விருத்தாசலத்தில் நிறுத்தப்பட்டன. வட தமிழகத்தில் வர்தா புயல் காரணமாக ரயில்வே தண்டவாளங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். இதனிடையே பயணிகள் நலனுக்காக 4 சிறப்பு ரயில்களை விழுப்புரம், விருத்தாசலத்தில் இருந்து தெற்கு ரயில்வே இயக்கியுள்ளது.
SPL Trains @RailMinIndia @DrmChennai @SalemDRM @TVC138 @DRMTPJ @propgt14 @SrDCMMadurai pic.twitter.com/B5Z1OCgVnN
— @GMSouthernrailway (@GMSRailway) December 13, 2016
விழுப்புரத்தில் இருந்து நெல்லைக்கு பகல் 1.30;
விழுப்புரத்தில் இருந்து செங்கோட்டைக்கு மாலை 3 மணி;
விருத்தாசலத்தில் இருந்து ராமேஸ்வரத்துக்கு பகல் 2.30 மணி;
விருத்தாசலத்தில் இருந்து மதுரைக்கு பகல் 1 மணிக்கு இந்த சிறப்பு ரயில்கள் இன்று இயக்கப்பட்டன.