For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு கட்டண ரயில்கள் மட்டுமே- பயணிகள் ஏமாற்றம்

தை பொங்கல் பண்டிகைக்கான கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் நெல்லைக்கு சிறப்பு கட்டண ரயில்களை இயக்குவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழர் திருநாளான தை பொங்கல் பண்டிகையை கொண்டாட பலர் சொந்த ஊருக்கு பயணம் செய்வார்கள். தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் கடந்த 4 மாதங்களுக்கு முன்பே நிரம்பிவிட்டது. இதனால் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் சிறப்பு கட்டண ரயில்களை மட்டுமே தெற்கு ரயில்வே அறிவித்துள்ளதால் பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

கூடுதல் கட்டணம் கொண்ட ரயில்களை சென்னை-நெல்லை இடையேயும், நாகர்கோவில் மங்களூர் இடையேயும் இயக்குகிறது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

Special trains in view of Pongal rush

ஜனவரி 6: சென்னை எழும்பூர் - நெல்லை சிறப்பு கட்டண ரயில் (06001) புறப்படும் நேரம் - 11.45pm

ஜனவரி 8: நெல்லை - சென்னை எழும்பூர் சிறப்பு கட்டண ரயில்(06002) புறப்படும் நேரம் - 2.45pm

ஜனவரி 15: நாகர்கோவில் - மங்களூரு சிறப்பு கட்டண ரயில்(06029) புறப்படும் நேரம் - 4.15pm

ஜனவரி 16: மங்களூரு - நாகர்கோவில் சிறப்பு கட்டண ரயில்(06030) புறப்படும் நேரம் -10.35am

இதற்கான முன்பதிவு ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் இன்று முதல் தொடங்குகிறது என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

English summary
The following special trains will be run to clear the extra rush of traffic in view of Pongal festival.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X