பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு கட்டண ரயில்கள் மட்டுமே- பயணிகள் ஏமாற்றம்
தை பொங்கல் பண்டிகைக்கான கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் நெல்லைக்கு சிறப்பு கட்டண ரயில்களை இயக்குவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை: தமிழர் திருநாளான தை பொங்கல் பண்டிகையை கொண்டாட பலர் சொந்த ஊருக்கு பயணம் செய்வார்கள். தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் கடந்த 4 மாதங்களுக்கு முன்பே நிரம்பிவிட்டது. இதனால் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் சிறப்பு கட்டண ரயில்களை மட்டுமே தெற்கு ரயில்வே அறிவித்துள்ளதால் பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
கூடுதல் கட்டணம் கொண்ட ரயில்களை சென்னை-நெல்லை இடையேயும், நாகர்கோவில் மங்களூர் இடையேயும் இயக்குகிறது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஜனவரி 6: சென்னை எழும்பூர் - நெல்லை சிறப்பு கட்டண ரயில் (06001) புறப்படும் நேரம் - 11.45pm
ஜனவரி 8: நெல்லை - சென்னை எழும்பூர் சிறப்பு கட்டண ரயில்(06002) புறப்படும் நேரம் - 2.45pm
ஜனவரி 15: நாகர்கோவில் - மங்களூரு சிறப்பு கட்டண ரயில்(06029) புறப்படும் நேரம் - 4.15pm
ஜனவரி 16: மங்களூரு - நாகர்கோவில் சிறப்பு கட்டண ரயில்(06030) புறப்படும் நேரம் -10.35am
இதற்கான முன்பதிவு ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் இன்று முதல் தொடங்குகிறது என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.