தொண்டு உள்ளம் இறைவனின் இல்லம்.. மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில், காரைக்குடி அழகப்பாபுரம் லயன்ஸ் சங்கம் சார்பில் பேச்சுப் போட்டி நடத்தப்பட்டது.
தலைமையாசிரியர் பீட்டர் ராஜா அவர்கள் அனைவரையும் வரவேற்றார். அரிமா நிலவழகன், அரிமா முருகேசன் மற்றும் பட்டதாரி ஆசிரியர் அனுராதா ஆகியோர் போட்டிக்கு நடுவர்களாக செயல்பட்டனர்.
"தொண்டு உள்ளம் இறைவனின் இல்லம்" என்ற தலைப்பில் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் பேசினார்கள். இப்போட்டியில் ஜன்னத் நிஷா முதலிடமும், ஐஸ்வர்யா இரண்டாமிடமும், விக்னேஷ் மூன்றாமிடமும் பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பள்ளி அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாவட்ட அளவில் நடைபெறவுள்ள போட்டிகளில் பங்கு பெறவுள்ளனர்.
பட்டதாரி ஆசிரியர் விஜயலட்சுமி நன்றி கூறினார். பட்டதாரி ஆசிரியர் கோமதி போட்டிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.