ஆஹா.. இப்படியும் ஒரு விளம்பரமா.. அடேங்கப்பா பிசினஸ் டேக்டிக்ஸை பாருங்க மக்களே!
சென்னை: பிசினஸ் மேக்னட் என்பார்களே... அது சாட்சாத் நம்மாளுங்கதான். ஒரு பொருளை வியாபாரம் பண்றதுல நம்மள மிஞ்ச ஆள் இல்லை... அதுக்காக விளம்பரம் பண்றதுல அதைவிட பெரிய கில்லாடிங்க!
வாட்ஸ்அப்பில் ஒரு விளம்பரம் பரவி வருகிறது. அது எந்த ஊர் என்றெல்லாம் தெரியவில்லை. அந்த விளம்பரத்தை பத்திதான் இந்த குட்டி செய்தி.
ஒரு கோழி பிரியாணி கடை வாசலில் ஒரு போர்டு வைக்கப்பட்டுள்ளது. சின்ன சைஸ் போர்டுதான். அதனால் அந்த கடைக்கு வாசலில்தான் வைத்துள்ளார்கள்.
அந்த போர்டில் ஒரு கோழியின் படம் உள்ளது. அதற்கு கீழே "நீ அழகா இருக்கேனு நினைக்கல... உன்னை பிடிச்சி பரியாணி செய்து சாப்பிடனும்னு நினைக்கல... ஆனால் உன்னை பார்த்ததும் இதெல்லாம் நடந்துடுமோனு பயமா இருக்கு.." என்று எழுதப்பட்டுள்ளது.
இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை வேறு. பெரும்பாலான வீடுகளில் இன்னைக்கு அசைவம்தான் என்பதால் இந்த விளம்பரம் எல்லாரையும் இழுத்து வருகிறது.
டைரக்டர் மணிரத்னம் அலைபாயுதே படத்தில் எழுதிய மிக அழகான காதல் வசனத்தை இன்னைக்கு கோழிக்கடை வரை கொண்டு வந்து விட்டார்களே.. அட அப்பரண்டிஸ்களா!