டவுண் சிண்ட்ரோம் பற்றி பிரச்சாரம் செய்த சென்னை ஸ்ரீ அருணோதயம்.. மாணவர்களுடன் உரையாடல்!
டவுண் சிண்ட்ரோம் எனப்படும் மனநலிவு குறைபாடு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஸ்ரீ அருணோதயம் என்ற அமைப்பு சென்னையில் பிரச்சாரம் செய்து இருக்கிறது.
சென்னை: டவுண் சிண்ட்ரோம் எனப்படும் மனநலிவு குறைபாடு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஸ்ரீ அருணோதயம் என்ற அமைப்பு சென்னையில் பிரச்சாரம் செய்து இருக்கிறது.
சென்னையில் உள்ள ஸ்ரீ அருணோதயம் என்ற அமைப்பு மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள், மனவளர்ச்சி இல்லாத குழந்தைகள், மனநலிவு குறைபாடு மூலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் ஆகியோருக்கு ஆதரவு அளித்து வருகிறது. இந்த நிலையில் இந்த அமைப்பு சென்னையில் உலக மனநலிவு நாள் அன்று மனநலிவு குறைபாடு பற்றி பிரச்சாரம் செய்துள்ளார்கள்.
சென்னையில் உள்ள பெரிய இரண்டு கல்லூரிகளில் கடந்த 21ம் தேதி இவர்கள் பிரச்சாரம் செய்து மாணவர்களுடன் உரையாடி இருக்கிறார்கள். இந்த நிகழ்வு குறித்து ஸ்ரீ அருணோதயம் அமைப்பின் நிறுவனர் ஐயப்ப சுப்ரமணியன் பத்திரிக்கையாளர்களிடம் பேசினார்.
அதில் ''மனநலிவு குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் எல்லோரும் சமூகத்தில் சரியாக நடத்தப்பட வேண்டும். அவர்களுக்கான மரியாதை சரியாக கொடுக்கப்பட வேண்டும். இந்த குறிக்கோளுடன்தான் நாங்கள் இயங்கிக் கொண்டு இருக்கிறோம்'' என்றுள்ளார்.