இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்.. தமிழக மீனவர்கள் 11 பேர் நெடுந்தீவு அருகே கைது!
ராமேஸ்வரம்: கச்சத்தீவு-நெடுந்தீவு இடையே மீன்பிடிக்கும் போது தமிழக மீனவர்கள் 4 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
இந்திய பெருங்கடலில் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வது மீண்டும் தொடர்கதையாகி இருக்கிறது. சில நாட்களாக அமைதியாக இருந்த இலங்கை கடற்படை மீண்டும் தமிழக மீனவர்களை கைது செய்ய தொடங்கி உள்ளது.
இன்று கச்சத்தீவு-நெடுந்தீவு இடையே மீன்பிடிக்கும் போது தமிழக மீனவர்கள் 11 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி அவர்களை கைது செய்து இருக்கிறார்கள்.
ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் சொத்து மதிப்பு எவ்வளவு? வெளியான தகவல்
தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது, கைது செய்வது என்று இலங்கை கடற்படையின் அட்டூழியம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. மீனவர்களின் வலைகள் மற்றும் படகுகளையும் கடற்படை அபகரித்துள்ளது.
கைது செய்யப்பட மீனவர்கள் அனைவரும் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இன்று இலங்கையில் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட இருக்கிறார்கள்.