இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 7 பேர் விடுதலை!
ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 7 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கச்சத்தீவு அருகே மீன் பிடிக்கும் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது, விரட்டியடிப்பது, கைது செய்வது என்று இலங்கை கடற்படை தொடர்ந்து அட்டூழியம் செய்து வருகிறது.
இந்நிலையில் கச்சத்தீவு அருகே 15 தமிழக மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தார்கள். அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி அவர்களை கைது செய்தனர்.
மேலும் அப்பகுதியில் 4 படகுகளில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்களையும் அவர்கள் விரட்டியடித்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
தற்போது இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 7 பேர் 3 மணி நேரம் விசாரணைக்கு பின் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள 8 பேர் விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.