For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மீண்டும், மீண்டும் சீண்டும் இலங்கை கடற்படை... ராமேஸ்வரம் மீனவர்கள் மீது தாக்குதல்

Google Oneindia Tamil News

ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே விசைப்படகுகளில் சென்ற 100-க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தினர்.

கடலில் மீன்பிடிப்பதற்காக நேற்று 25 படகுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் சென்றனர். இந்தநிலையில், எல்லை தாண்டி வந்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி உள்ளனர்.

Sri Lankan Navy atrocity attacked on Rameswaram Fishermens

தாக்குதலில் காயமடைந்த மீனவர் ரியான் என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த வாரம் புதுக்கோட்டை, ராமேஸ்வரம் மீனவர்கள் 20 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மீண்டும் இலங்கை கடற்படை தாக்குதலை நடத்தி உள்ளது.

மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.

English summary
Sri Lankan navy attacked on more than 100 Rameswaram fishermen near Katchatheevu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X