தமிழக மீனவர்களின் படகுகள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு: மீன்பிடி சாதனங்கள் சேதம்
Recommended Video
ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களின் படகுகளை நோக்கி இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
இலங்கை கடற்படையின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கச்சத்தீவு, நெடுந்தீவு அருகே மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை தாக்குவது, கைது செய்வது, படகுகளை சேதப்படுத்துவது என்று தொடர்ந்து அட்டூழியம் செய்கிறது.
கேட்டால் எல்லை தாண்டி வந்தார்கள் கைது செய்தோம் என்று ஒரே பதிலை அளித்து வருகிறது இலங்கை கடற்படை. இந்நிலையில் ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 50க்கும் மேற்பட்ட படகுகளில் கடலுக்கு சென்றுள்ளனர்.
கச்சத்தீவு அருகே அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களின் படகுகளை நோக்கி துப்பகாக்கியால் சுட்டனர்.
இதில் படகுகளில் இருந்த மீன்பிடி சாதனங்கள் சேதம் அடைந்துள்ளது.