For Daily Alerts
Just In
ஸ்ரீதேவியின் உடல் மும்பையில் நாளை தகனம்
நடிகை ஸ்ரீதேவியின் இறுதி ஊர்வலம் நாளை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
ஸ்ரீதேவியின் இறுதி ஊர்வலம் இன்று நடைபெறுகிறது- வீடியோ
மும்பை : நடிகை ஸ்ரீதேவியின் இறுதி ஊர்வலம் நாளை நடைபெறுகிறது. மாலையில் உடல் தகனம் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
துபாயில் திருமண நிகழ்ச்சிக்காக சென்ற இடத்தில் ஸ்ரீதேவி குளியல் தொட்டி நீரில் மூழ்கி கடந்த சனிக்கிழமை உயிரிழந்தார். இவருக்கு உடற்கூறாய்வு சோதனைகள் நிறைவு செய்யப்பட்டன.
இதையடுத்து நாளை காலை அந்தேரியில் உள்ள ரிகிரியேஷன் கிளப்புக்கு பொதுமக்கள், ரசிகர்கள், திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள் ஆகியோர் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்படுகிறது.
இதையடுத்து அங்கிருந்து அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வில்லே பார்லே மைதானத்தில் இறுதி சடங்குகள் நடத்தப்பட்டு மாலையில் ஸ்ரீதேவியின் உடல் தகனம் செய்யப்படும்.
Comments
English summary
Sridevi's last funeral will take place in Mumbai on tomorrow 11 am. Her body will reach Mumbai tonight.