For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்... தமிழக மீனவர்கள் 8 பேரை கைது செய்தது

கச்சதீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

ராமேஸ்வரம்: கச்சதீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

கச்சதீவு அருகே மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக குற்றம்சாட்டி இலங்கை கடற்படை அவர்களை கைது செய்வதும், படகுகளை பறிமுதல் செய்வதுமாக அட்டூழியம் செய்து வருகிறது.

Srilankan Navy arrests 8 TN fishermen

கச்சத்தீவு அருகே ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 8 பேர் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக அவர்களை சுற்றி வளைத்தனர்.

பின்னர் மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்களின் 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களிடம் மன்னார் துறைமுகத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மீனவர்கள் தங்களுக்கு வரையறுக்கப்பட்ட எல்லையில் மீன் பிடித்தாலும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக அவர்களை சுடுவது, கைது செய்வது, படகுகளை பறிமுதல் செய்வது உள்ளிட்ட செயல்களில் இலங்கை கடற்படையினர் ஈடுபடுகின்றனர்.

English summary
8 Tamil fishermen who were fishing near Katchaththeevu was arrested by Srilankan Navy and they are being questioned in Mannar port.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X