தொடரும் இலங்கை கடற்படையின் அட்டூழியம்.. தமிழக மீனவர்கள் 4 பேர் மீண்டும் கைது
எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
ராமேஸ்வரம்: எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. படகு ஒன்றையும் அவர்கள் பறிமுதல் செய்துள்ளனர்.
ராமஸே்வரம் மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் 500க்கும் மேற்பட்ட படகுகளில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் 4 மீனவர்களை ஒரு படகுடன் சிறைபிடித்து சென்றுள்ளனர்.
அவர்கள் நெடுந்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது எல்லைத்தாண்டி வந்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றுள்ளனர். மீனவர்களிள் படகையும் அவர்கள் சிறைப்பிடித்துச் சென்றனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்களை இலங்கை கடற்படையினர், காங்கேசம் துறைமுகத்தில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர். தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதும் படகுகள் பறிமுதல் செய்யப்படும் தொடர் கதையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.