தமிழக மீனவர்களுக்கு கச்சத்தீவில் அடுத்த அதிர்ச்சி.. வணிக வளாகத்தை திறந்தது இலங்கை கடற்படை!
கச்சத்தீவில் இலங்கை கடற்படையினர் பொழுதுபோக்கு வணிகவளாகத்தை திறந்திருப்பது தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: கச்சத்தீவில் இலங்கை கடற்படையினர் பொழுதுபோக்கு வணிகவளாகத்தை திறந்திருப்பது தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படை அடிக்கடி தாக்குதல் நடத்துவதையும் கைது செய்வதையும் வாடிக்கையாக கொண்டுள்ளது.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறும் இலங்கை கடற்படையின் அட்டூழியத்திற்கு தீர்வு காணுமாறும் வலியுறுத்தி அளுத்துவிட்டனர் தமிழக மீனவர்கள். மீனவர்கள் பிரச்சனைக்கு இதுவரை மத்திய மாநில அரசுகள் நிரந்தர தீர்வு காணவில்லை.
இந்நிலையில் கச்சத்தீவில் இலங்கை கடற்படையினரின் வணிக வளாக கட்டடம் திறக்கப்பட்டுள்ளது. கச்சத்தீவில் ஏற்கனவே கடற்படை தளம் அமைத்த நிலையில் தற்போது பொழுதுபோக்கு வணிக வளாகம் திறக்கப்பட்டுள்ளது.
மீனவர்களை கண்காணிப்பதற்காகவும் வணிகவளாகம் பயன்பத்தப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தமிழக மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.