ஆயுத குவியல் சிக்கிய பரபரப்புக்கு இடையே ராமேஸ்வரத்தில் இலங்கை மர்ம நபர் கைது
ராமேஸ்வரத்தில் ஆயுதக் குவியல் கிடைத்துள்ள பரபரப்பு அடங்குவதற்குள் இலங்கையை சேர்ந்த மர்ம நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
Recommended Video
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கடற்கரையில் இலங்கை நாட்டவர் ஒருவர் பைபர் படகுடன் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ராமேஸ்வரத்தில் தங்கச்சிமடத்தில் மீனவர் எடிசனின் வீட்டின் பின்புறம் கழிவுநீர் தொட்டிக்காக குழி தோண்டியபோது அங்கு குவியல் குவியலாக துப்பாக்கி, தோட்டாக்கள், கையெறி குண்டுகள் ஆகியன கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
கடந்த 1983 ஆம் ஆண்டு இலங்கை போரின்போது ராமேஸ்வரத்தில் முகாம் அமைத்த விடுதலை புலிகள் அமைப்பினுடைய ஆயுதங்களாக இவை இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் ராமேஸ்வரம் உச்சிபுளி வலங்காபுரி கடற்கரை பகுதியில் இலங்கை நாட்டவர் ஒருவர் பைபர் படகில் சுற்றித் திரிந்தார்.
அவரை போலீஸார் கைது செய்தனர். அந்த பைபர் படகையும் பறிமுதல் செய்தனர். இலங்கையில் இருந்து தங்கம் கடத்தி வந்தாரா? என்றும் அகதிகளை ஏற்றிச் செல்ல வந்தவரா? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ராமேஸ்வரத்தில் பெருமளவு ஆயுதக் குவியல் கிடைத்த நிலையில் இலங்கை நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.