For Daily Alerts
Just In
ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவர் மடத்தின் ஸ்ரீரங்க ராமானுஜ மகா தேசிகர் காலமானார்
ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவர் மடத்தின் ஸ்ரீரங்க ராமானுஜ மகா தேசிகர் மரணம் அடைந்தார்.
சென்னை: சென்னையில் உடல்நல குறைவால் அவதிப்பட்டு வந்த ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவர் மடத்தின் ஸ்ரீரங்க ராமானுஜ மகா தேசிகர் மரணம் அடைந்தார்.
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தை சேர்ந்தவர் இவர். தமிழாசிரியராக இருந்தார். தமிழ் மீது பற்றுக் கொண்டிருந்தார்.
இவர் பல்வேறு கருத்தரங்கங்களில் கலந்து கொண்டு சொற்பொழிவாற்றியுள்ளார். அவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சென்னையில் இருந்து வந்தார்.
இந்நிலையில் அவர் இன்று மரணமடைந்தார். அவரது உடல் இன்று மாலை சென்னையிலிருந்து ஸ்ரீரங்கத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.
அங்கு பக்தர்கள், தமிழ் ஆர்வலர்கள், மடாதிபதிகள், ஜீயர்கள் ஆகியோரின் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது. அவரது உடலுக்கு நாளை இறுதி சடங்கு நடைபெறுகிறது.
Comments
English summary
Sriranga Ramanuja Maha Desigar dies in Chennai.
Story first published: Monday, March 19, 2018, 14:41 [IST]