இடைத்தேர்தல் புகார்கள் எதிரொலி – ஸ்ரீரங்கம் உதவி கமிஷனர் அதிரடி மாற்றம்!
திருச்சி: ஸ்ரீரங்கம் புதிய உதவி போலீஸ் கமிஷனராக மாதவன் என்பவரை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஸ்ரீரங்கம் தொகுதியில் நாளை மறுநாள் இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது.
இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட் டை உதவி போலீஸ் கமிஷனராக இருந்த மாதவனை ஸ்ரீரங்கம் உதவி போலீஸ் கமிஷனராக நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதுவரை ஸ்ரீரங்கம் உதவி போலீஸ் கமிஷனராக பணியாற்றி வந்த கபிலனுக்கு வேறு பணியிடம் ஒதுக்கப்படாமல் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
தேர்தல் பிரச்சாரத்தின் போது கடந்த சில நாட்களாக ஸ்ரீரங்கத்தில் அ.தி.மு.க, தி.மு.க, பா.ஜ.க கட்சிகளிடையே மோதல் ஏற்பட்டது.
மேலும் அ.தி.மு.க தரப்பில் வாக்காளர்களுக்கு பணம் பட்டு வாடா செய்யப்பட்டதாகவும் புகார் எழுந்தது. இதனையடுத்து உதவி போலீஸ் கமிஷனர் மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.