பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதம்.. ஈரோடு மாவட்டத்திற்கு முதலிடம், வேலூருக்கு கடைசி இடம்
சென்னை: பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் அடிப்படையில், 98.48 சதவீத தேர்ச்சி விகிதத்துடன் ஈரோடு மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. வேலூர் மாவட்டம் 86.49 சதவீதத்துடன் கடைசி இடம் பிடித்துள்ளது.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 15 முதல் ஏப்ரல் 13ஆம் தேதி வரை நடைபெற்றது. தமிழகம், புதுவையில் 10.72 லட்சம் பேர் எழுதினர்.
தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியானது. விருதுநகர் மாவட்டம், நோபல் மெட்ரிகுலேசன் பள்ளி மாணவர் ஆர்.சிவக்குமார் மற்றும் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், எஸ்ஆர்வி எக்சல் பள்ளி மாணவி பிரேம சுதா ஆகியோர் தலா 499 மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் பிடித்துள்ளனர்.
498 மதிப்பெண்களுடன் 50 மாணவ, மாணவியர் 2வது இடம் பிடித்தனர். 497 மதிப்பெண்களுடன் 244 பேர் 3வது இடத்தைப் பிடித்தனர்.
98.48 சதவீத தேர்ச்சி விகிதத்துடன் ஈரோடு மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. பிளஸ் டூ தேர்விலும் ஈரோடு மாவட்டம்தான் முதலிடம் பிடித்திருந்தது.
மாவட்டவாரியான, தேர்ச்சி விகிதம் சதவீத அடிப்படையில், கீழே தரப்பட்டுள்ளது:
ஈரோடு - 98.48
கன்னியாகுமரி-- 98.17
விருதுநகர் - 97.81
ராமநாதபுரம் - 97.1
தூத்துக்குடி-- 96.93
சிவகங்கை - 96.66
தேனி - 96.57
கோவை - 96.22
மதுரை - 95.68
திருநெல்வேலி- 95.3
திண்டுக்கல் - 92.57
நீலகிரி - 93.25
திருப்பூர் - 95.62
சேலம் - 94.21
நாமக்கல் - 96
கிருஷ்ணகிரி - 95.05
தர்மபுரி - 94.77
புதுக்கோட்டை - 94.46
கரூர் - 96.67
அரியலூர் - 92.52
பெரம்பலூர் - 96.52
திருச்சி - 95.92
நாகப்பட்டினம்- 89.43
திருவாரூர் - 89.33
தஞ்சாவூர் - 95.39
பாண்டிசேரி - 92.42
விழுப்புரம் - 88.07
கூடலூர் - 89.13
திருவண்ணாமலை- 89.03
காஞ்சீபுரம் - 92.77
திருவள்ளூர் - 90.84
சென்னை - 94.25
வேலூர் - 86.49