For Daily Alerts
Just In
மெட்ரோ ரயில் சேவை தாமதத்தைக் கண்டித்து சிறை நிரப்பும் போராட்டம்: ஸ்டாலின் எச்சரிக்கை
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் சேவையை விரைவில் தொடங்கா விட்டால் திமுக சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவோம் என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஜெ.அன்பழகன் தந்தை கி.ஜெயராமன் நினைவுநாள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ஸ்டாலின், ஜெயலலிதா விடுதலையான பிறகு ரயில் சேவையை தொடங்கலாம் என்று அதிமுக ஆட்சி திட்டமிடுகிறதா?'' என்று தெரிவித்தார். அவர் வரும் வரை மக்கள் காத்துக்கொண்டிருக்க மாட்டார்கள் என்றும் .கூறினார்.
''சென்னை மெட்ரோ ரயில் சேவையை விரைவில் தொடங்கா விட்டால் திமுக சார்பில் போராட்டம் நடத்துவோம் சென்னை உள்பட நான்கு மாவட்டங்களைச் சார்ந்த திமுக தொண்டர்களுடன் போராட்டம் நடத்துவோம். அனுமதி தராவிட்டால் சிறை நிரப்பும் போராட்டத்தை திமுக நடத்தும்.
Comments
English summary
M.K.Stalin demanded the immediate inauguration of metro rail service between Koyambedu and Alandur, since 90 per cent of the work had already been completed. Urging the State government to act immediately and launch the service, he said people need not wait for a former Chief Minister, who had been convicted in the disproportionate assets case, to inaugurate it.
Story first published: Wednesday, March 11, 2015, 10:51 [IST]