செவிலியர்களை நடுத்தெருவில் போராட விடுவதா... கொந்தளிக்கும் மு.க. ஸ்டாலின்
உயிர்காக்கும் செவிலியர்களை நடுரோட்டில் போராட விட்டது கண்டிக்கத்தக்கது என ஸ்டாலின் அறிக்கை விடுத்துள்ளார்.
சென்னை: சென்னையில் இரண்டு நாட்களாக நடந்து வரும் செவிலியர்கள் போராட்டம் குறித்து ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் உயிர்காக்கும் செவிலியர்களை நடுரோட்டில் போராட விட்டது கண்டிக்கத்தக்கது என ஸ்டாலின் கூறியுள்ளார்.
பணி நிரந்தரம், ஊதிய உயர்வு போன்ற போன்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி 2-வது நாளாக செவிலியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை சாலை மறியல் செய்ய முயன்ற 1000க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
தற்போது செவிலியர்களின் போராட்டம் குறித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் செவிலியர்களை இப்படி நடுரோட்டில் போராட விட்டது தவறு என்று கூறியுள்ளார். மேலும் செவிலியர்களை அழைத்துப்பேசி அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
அதேபோல் செவிலியர்களின் கோரிக்கையை ஏற்காமல் அவர்களை கைது செய்த போலீஸ் நிர்வாகத்தின் செயலையும் கண்டித்து இருக்கிறார்.