முக்கொம்பில் ஸ்டாலின்.. அணையின் உடைந்த பகுதிகளில் ஆய்வு
திருச்சி முக்கொம்பு அணையில் உடைப்பு ஏற்பட்ட பகுதிகளை திமுக தலைவர் ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார்.
திருச்சி: திருச்சி முக்கொம்பு அணையில் உடைப்பு ஏற்பட்ட பகுதிகளை திமுக தலைவர் ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார்.
காவிரியில் வெள்ளம் காரணமாக தமிழகத்தில் தொடர்ச்சியாக அணைகளில் உடைப்பு ஏற்பட்டது. இதற்கு மணல் கொள்ளையும் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த வாரம் முக்கொம்பு அணையில் உடைப்பு ஏற்பட்டது.
கொள்ளிடம் முக்கொம்பு மேலணையில் 9 மதகுகள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் மொத்தமாக காவிரி நீர் அப்படியே கொள்ளிடம் வழியாக கடலுக்கு செல்லும் நிலை உருவானது.
தற்போது அங்கு அவசர அவசரமாக தடுப்பு அணை கட்டும் பணிகள் நடந்து வருகிறது. 1836ம் ஆண்டு, இந்த அணை கட்டப்பட்டது. இந்த அணை உடைந்த காரணத்தால் விவசாயிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இந்த நிலையில் திருச்சி முக்கொம்பு அணையில் உடைப்பு ஏற்பட்ட பகுதிகளை திமுக தலைவர் ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார். காலையில் திருச்சி சென்ற அவர் ஆய்வு பணிகளை செய்து வருகிறார்.
அணையில் உடைந்த பகுதிகளை ஸ்டாலின் பார்வையிடுகிறார். அவருடன் திருச்சி திமுக நிர்வாகிகள் பலர் உள்ளனர். அங்கு இருந்த விவசாயிகளுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்துள்ளனர். அங்கு இதனால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.