ஸ்டாலின் கனவு உலகில் சஞ்சரிக்கிறார்.. அறிவாலயத்தை தலைமைச் செயலகமாக நினைத்துள்ளார்.. விளாசிய அமைச்சர்
ஸ்டாலின் கனவு உலகில் சஞ்சரிக்கிறார் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: ஸ்டாலின் கனவு உலகில் சஞ்சரிக்கிறார் என்றும் அறிவாலயத்தை தலைமை செயலகமாக நினைத்துகொண்டு அனைத்துக்கட்சி கூட்டத்தை தினமும் நடத்திவருகிறார் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை பட்டினப்பாக்கத்தில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் பேசியதாவது, காவிரி வழக்கு தீர்ப்புக்கு எந்த அரசும் கட்டுப்பட்டே ஆக வேண்டும். நீரை திறக்கும் அதிகாரம் காவிரி மேலாண்மை ஆணையத்துக்கே உண்டு.
ஸ்டாலின் கனவு உலகத்தில் சஞ்சரிக்கிறார். அறிவாலயத்தை தலைமை செயலகமாக நினைத்துகொண்டு அனைத்துக்கட்சி கூட்டத்தை தினமும் நடத்திவருகிறார்.
காவிரி உரிமை நிலைநாட்டப்பட்டிருப்பதை ஸ்டாலினால் பொறுக்க முடியவில்லை. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தமிழக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
கட்சி, அரசு நிர்வாகத்தில் பெண்களுக்கு அதிக இடங்களை ஒதுக்கீடு செய்தவர் ஜெயலலிதா. காவிரி வழக்கில் நல்ல தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் கூறினனார். மேலும் ரஜினிகாந்துக்கு காலம் கடந்தது ஞானோதயம் வந்துள்ளது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.