For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அதிமுக ஆட்சியை மக்கள் புறக்கணிக்கும் காலம் வந்துவிட்டது - மு.க.ஸ்டாலின்

By Karthikeyan
Google Oneindia Tamil News

ஈரோடு:

அவினாசி - அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்றக் கோரி அவினாசி பேருந்து நிலையம் அருகே 12 நாளாக போராட்டக் குழுவினர் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர். போராட்டக் குழுவினரை ஸ்டாலின் இன்று சந்தித்து பேசினார்.

stalin meets Athikadavu - Avinashi scheme protesters

அப்போது திமுக ஆட்சிக்கு வந்தால் அவினாசி - அத்திக்கடவு திட்டம் நிறைவேற்றப்படும். ஆட்சி மாறும் சூழல் இருப்பதால் நம்பிக்கையுடன் உங்கள் போராட்டத்தை கைவிடுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.

சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், கொங்கு மண்டலத்தில் 6 அமைச்சர்கள் இருந்தும் ஒருவர் கூட போராட்டக் குழுவினரை சந்தித்து பேசவில்லை என குற்றம்சாட்டினார். மேலும் திமுக ஆட்சியில் இந்த திட்டத்திற்கான முதல் கட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆட்சி மாற்றம் காரணமாகவே திட்டம் கைவிடப்பட்டது.

திமுக ஆட்சிக்கு வந்தால் அவினாசி - அத்திக்கடவு திட்டம் உறுதியாக நிறைவேற்றப்படும் என்றார். சட்டசபை புறக்கணிப்பு பற்றி செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, மக்கள் இந்த ஆட்சியை வரும் தேர்தலில் புறக்கணிப்பார்கள் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.

English summary
DMK treasurer meets Athikadavu - Avinashi scheme protesters on today
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X