ஆட்சியை கவிழ்க்கும் வரை திமுகவின் போராட்டம் தொடரும்: ஸ்டாலின்- வீடியோ
ஆட்சியை அப்புறப்படுத்தும் வரை திமுக தொடர்ந்து போராடும் என்று செயல்தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை: ஆளுநர் நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆட்சியை கவிழ்க்கும் வரை திமுக போராடும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
திருச்சியில் நடைபெற்ற நீட் தேர்வுக்கு எதிரான கண்டன பொதுக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், நீட் தேர்வுக்கு எதிராக அடுத்தகட்ட போராட்டம் வரும் 13ஆம் தேதி அன்று அனைத்துக் கட்சிகளின் சார்பில் தமிழகத்தில் உள்ள எல்லா மாவட்டத் தலைநகரங்களிலும் பெரிய அளவில் நடத்தப்படும் என்றார்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பு விவரங்கள் கிடைத்தப் பிறகு அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் கலந்து அடுத்த அறிவிப்பு வெளியிடப்படும்'' என்று அவர் தெரிவித்தார்.
எதிர்கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பொறுப்பு ஆளுநரைச் சந்திக்க இருக்கிறோம். அப்படி சந்திக்கின்றபோது, அவர்களிடத்தில், இந்த பிரச்னைக்காக உங்களைச் சந்திக்கக் கடைசியாக வருவது இதுதான். இனி இதுகுறித்து உங்களைச் சந்திக்க நாங்கள் வரமாட்டோம்.
உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் இந்த ஆட்சி கவிழும் வரையில் போராட்டம் தொடரும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.