ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுங்கள்.. போராடும் மக்களுக்கு திமுக துணை நிற்கும்: ஸ்டாலின்
சென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ளது. கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் போராட்டம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில் ஸ்டெர்லைட் போராட்டத்துக்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்களின் போராட்டத்திற்கு திமுக ஆதரவு அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளால் தாமிரபரணி ஆறு பாழ்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
மக்கள் போராட்டத்திற்கு திமுக துணை நிற்கும் என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு அரசு அனுமதி அளிக்க கூடாது என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.