பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை அரசு குறைக்க வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்
பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை அரசு குறைக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை அரசு குறைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கும் பெட்ரோல் டீசல் விலையுடன் தமிழக அரசு வாட் வரியை சேர்த்து விற்பனை செய்கிறது. இதனால் பெட்ரோல் டீசல் விலையை மேலும் அதிகரிக்கிறது.
இந்நிலையில் வாட் வரியை குறைக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் தெரிவித்துள்ளார்.
குஜராத் மற்றும் மகாராஷ்ட்ராவை போல் உடனடியாக வாட் வரியை குறைக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் திமுக ஆட்சியில் அப்போதைய கருணாநிதி பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விற்பனை வரியை குறைத்ததாக ஸ்டாலின் தகவல் தெரிவித்துள்ளார்.