ஸ்டெர்லைட் தடை.. வழக்கு தொடுக்கும் எண்ணத்தில் வேதாந்தா.. தமிழக அரசு கேவியட் மனு
ஸ்டெர்லைட் ஆலை மூடப்படுவதற்கு எதிராக வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்தால் தங்கள் தரப்பு வாதத்தையும் கேட்க வேண்டும் என்று தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.
Recommended Video
சென்னை: ஸ்டெர்லைட் ஆலை மூடப்படுவதற்கு எதிராக வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்தால் தங்கள் தரப்பு வாதத்தையும் கேட்க வேண்டும் என்று தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்காக அரசாணை வெளியிட்டு இருக்கிறது. மக்களின் தொடர் கோரிக்கையை அடுத்து ஆலை நிரந்தரமாக மூடப்படுகிறது. இதுமக்கள் மத்தியில் பெரிய சந்தோசத்தை உண்டாக்கியுள்ளது.
கடந்த 100 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி, 13 பேரின் உயிரை இழந்து அவர்கள் இந்த வெற்றியை பெற்றுள்ளனர். ஆனாலும் ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படுவது இன்னும் உறுதியாகவில்லை. ஸ்டெர்லைட் நிறுவனம் இதற்கு எதிராக வழக்கு தொடுக்க வாய்ப்புள்ளது.
மேலும் அரசாணையில் தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. அரசாணை போதிய அளவில் வலுவாகவும் இல்லை. இதனால் ஸ்டெர்லைட் நிறுவனம் கண்டிப்பாக வழக்கு தொடுக்கும் என்று கூறப்படுகிறது.
இதனால் ஸ்டெர்லைட் ஆலை மூடப்படுவதற்கு எதிராக வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்தால் தங்கள் தரப்பு வாதத்தையும் கேட்க வேண்டும் என்று தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. தங்கள் அரசாணை குறித்து விளக்கம் கேட்க வேண்டும் என்றும் கேவியட் மனுவில் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.