சென்னையில் பெட்ரோல் பங்க்கை சின்னாபின்னமாக்கிய பேய்க்காற்று #CycloneVardah
சென்னை: வர்தா புயலின் தாக்கத்தால் சென்னையில் வீசும் பேய்க்காற்றில் பெட்ரோல் பங்க் ஒன்று சின்னாபின்னமாகியுள்ளது.
வர்தா புயல் சென்னை அருகே கரையை கடந்து கொண்டிருக்கிறது. இதனால் சென்னையில் கனமழை பெய்து வருகிறது. காற்று மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் வீசுகிறது.
பேய்க்காற்றால் சென்னையில் ஏராளமான மரங்கள் விழுந்துள்ளன. மேலும் பல்வேறு இடங்களில் மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன. சென்னை வரலாற்றில் முதல்முறையாக காற்று மணிக்கு 192 கிலோமீட்டர் வேகத்தில் வீசியுள்ளது.
இந்நிலையில் சென்னையில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றை பேய்க்காற்று சின்னாபின்னமாக்கியுள்ளது. பெட்ரோல் பங்க் முற்றிலும் நிலைகுலைந்து போயுள்ளது.
சென்னை அண்ணா சாலையில் உள்ள ஹயாத் ஹோட்டல் கண்ணாடிகள் காற்றில் பறந்தன. பேய்க்காற்று வச்சு செய்வதால் ஹயாத் ஹோட்டல் அலங்கோலமாக காட்சியளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.