For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ப்ளஸ் 2 தேர்வில் தோல்வி : மாணவி தூக்குப்போட்டு தற்கொலை..

By Mayura Akilan
Google Oneindia Tamil News

நீலகிரி: பிளஸ் 2 தேர்வில் ஏற்பட்ட தோல்வி காரணமாக நீலகிரி மாவட்டத்தில் மாணவி ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் மற்றொரு மாணவி தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நீலகிரி மாவட்டம் தலைகுண்டா பகுதியை சேர்ந்த மாணவி கவிதா. ப்ளஸ் தேர்வு எழுதிவிட்டு முடிவுக்காக காத்திருந்தார்.

இன்று காலையில் தேர்வு முடிவுகள் வெளியான போது ரிசல்ட் பார்த்தவருக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. அவர் தோல்வியடைந்து விட்டதாக தெரியவரவே, உறவினர்கள் கேலி செய்வார்கள் என்று அஞ்சி வீட்டிற்குள் சென்ற மாணவி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அதேபோல் குன்னூரை அடுத்த உபதலையை சேர்ந்த சர்மிளா என்ற மாணவி, அரசு உதவிபெறும் பள்ளியில் படித்து வந்தார். பிளஸ் 2 தேர்வில் இவர் பெயிலானார். இதனையடுத்து வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார்.உயிருக்கு போராடிய நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

English summary
Kavitha, a plus two, allegedly committed suicide at Talaikonda in Nilgiris district on Friday. unable to bear her failure in plus two examinations.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X