For Daily Alerts
Just In
தற்கொலை பாயிண்ட்டாகும் அடையாறு.. ஆற்றில் குதித்து மாணவி தற்கொலை.. உடல் மீட்பு!
சென்னை அடையாறு ஆற்றில் குதித்து மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: அடையாறு ஆற்றில் குதித்து மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை சேர்ந்தவர் மாணவி ரம்யா. இவர் நேற்று கோட்டூர்புரம் மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் அவரது உடலை தேடி வந்தனர்.
இந்நிலையில் அவரது உடல் இன்று மீட்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மாணவி ரம்யா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
அடையாறு நாளுக்கு நாள் தற்கொலை பாயிண்ட்டாக மாறி வருகிறது. அடையாற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை தொடர்ந்து இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments
English summary
Student Ramya body rescued from Adyar river. Student Ramya commit suicide in Adyar yesterday.