For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வியாசர்பாடியில் பேருந்தில் கத்தியுடன் மாணவர்கள் மோதல்: பயணி காயம்- 6 பேர் கைது

வியாசர்பாடியில் பேருந்தில் கத்தியுடன் மாணவர்கள் மோதி கொண்ட சம்பவத்தின் போது பயணி ஒருவர் காயமடைந்தார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: வியாசர்பாடியில் பேருந்தில் கத்தியுடன் மாணவர்கள் மோதிக் கொண்ட சம்பவத்தால் பயணி ஒருவர் காயமடைந்தார். இது தொடர்பாக பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்த 6 மாணவர்களை கைது செய்தனர்.

வியாசர்பாடியில் உள்ள அம்பேத்கர் கல்லூரியை சேர்ந்த மாணவர்களுக்கும் பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்த மாணவர்களுக்கும் இடையே பேருந்தில் பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் இரு தரப்புக்கும் கடந்த செவ்வாய்க்கிழமை மோதிக் கொண்டனர்.

Students clash in Chennai with knife: A bus passenger injures

அம்பேத்கர் கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தும் திட்டத்துடன பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்த 7 பேர் வியாசர்பாடி பேருந்து நிறுத்தத்தில் கத்தியுடன் காத்திருந்தனர்.

அப்போது அந்த மாணவர்கள் இறங்கும் இடத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் விரட்டி செல்ல அவர்களும் கத்தியை கொண்டு விரட்டியதால் பேருந்து பயணிகள் ஆங்காங்கே சிதறினர்.

அப்போது இருதரப்பினர் கற்களை வீசி தாக்கியதால் பேருந்து பயணி ஒருவர் காயமடைந்தார். இது தொடர்பாக தகவலறிந்த எம்.கே.பி.நகர் போலீஸார் பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்த மலர்மன்னன், மோகன், மணிகண்டன், சந்திரக்குமார் உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர்.

English summary
Chennai Ambedkar college and Pachaiyappan college students clashes each other, bus passenger injures. 6 arrest in this incident.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X