சான்றிதழ் வழங்குவதில் அண்ணா பல்கலை தாமதம்.. விரைந்து வழங்க பிஇ முடித்த மாணவர்கள் கோரிக்கை
சான்றிதழ்களை வழங்க அண்ணா பல்கலைக்கழகம் தாமதிப்பதாக 2018 ஏப்ரல் மற்றும் 2017ஆம் ஆண்டுக்கு முன்பு பிஇ முடித்த மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
சென்னை: சான்றிதழ்களை வழங்க அண்ணா பல்கலைக்கழகம் தாமதிப்பதாக
2018 ஏப்ரல் மற்றும் 2017ஆம் ஆண்டுக்கு முன்பு பிஇ முடித்த மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் நடைபெற்ற பொறியியல் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் சிலருக்கு 3 மாதங்கள் ஆகியும் சான்றிதழ்கள் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
கடந்த திங்கட்கிழமை அன்று ஒரு சில மாணவர்களுக்கு மட்டும் சில சான்றிதழ்களை அனுப்பிய அண்ணா பல்கலை கழகம் 2018க்கு முன்பு படித்து முடித்து 2018இல் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு இன்னும் சான்றிதழ்களை அனுப்பவில்லை மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதனால் மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேற்படிப்பு பயில முடியாத சூழ்நிலை, வேலை பார்க்க முடியாத சூழ்நிலை, வெளிநாட்டிற்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பாதிக்கப்பட்ட மாணவர்கள் விரைந்து சான்றிதழ்களை வழங்க அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.