For Daily Alerts
Just In
சென்னையில் பரபரப்பு: துப்பாக்கியால் சுட்டு எஸ்.ஐ. தற்கொலை
Recommended Video
சென்னையில் பரபரப்பு: துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட எஸ்.ஐ.
சென்னை: சென்னை அயனாவரம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த உதவி ஆய்வாளர் சதீஷ் குமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவிடைமருதூர் அருகே இருக்கும் மேலையூரை சேர்ந்தவர் சதீஷ் குமார்(33). கடந்த 2011ம் ஆண்டு காவல் துறையில் சேர்ந்தார்.
சென்னை அயனாவரத்தில் உள்ள காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக இருந்து வந்தார். செவ்வாய்க்கிழமை சதீஷ் குமார் இரவு பணியில் இருந்துள்ளார்.
அப்போது அவர் தனது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். தனது இந்த முடிவுக்கு யாரும் காரணம் இல்லை என்று அவர் கடிதம் எழுதி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Comments
English summary
A sub-inspector named Sathish Kumar has committed suicide by shooting himself with his gun on tuesday night in Chennai. He has reportedly written a suicide note.