நெல்லையில் சப்-இன்ஸ்பெக்டர் தூக்கு போட்டு தற்கொலை
நெல்லை: நெல்லை பேட்டை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த ரவி, தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண் சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜபாளையம் அருகே உள்ள சம்சிகாபுரத்தை சேர்ந்தவர் ரவி 50. திருநெல்வேலி பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி உஷா மற்றும் கல்லுாரியில் பயிலும் இரண்டு மகன்கள் உள்ளனர். குடும்பத்தினர் நெல்லை டவுனில் காவலர் குடியிருப்பில் தங்கியிருந்தனர்.
சில தினங்களுக்கு முன்பு, உஷா சொந்த ஊருக்கு சென்றுவிட்டார். ரவி தனியாக இருந்துள்ளார். நேற்று காலையில் அவர் ஸ்டேஷன் பணிக்கு செல்லவில்லை. அவரது மனைவி, அவரது அலைபேசிக்கு கூப்பிட்டுள்ளார். பதில் இல்லாததால் பேட்டை ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் வந்து பார்த்தபோது அவர் வீட்டில் துாக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. முதல்கட்ட விசாரணையில் குடும்ப பிரச்சினை காரணமாக ரவி தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.