For Daily Alerts
Just In
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் திடீர் மழை.. மக்கள் மகிழ்ச்சி
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் திடீர் என்று மழை பெய்து வருகிறது.
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் திடீர் என்று மழை பெய்து வருகிறது.
சென்னையின் இன்று திடீர் என்று மழை பெய்து வருகிறது. இந்த வருடத்தில் பெய்யும் இரண்டாவது மழையாகும் இது.இந்த மழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி இருக்கிறது. திடீர் என்று பெய்த மழையால் சென்னை வாசிகள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.
இதனால் பல இடங்களில் நீர் தேங்கி இருக்கிறது. எக்மோர், நுங்கம்பாக்கம், மெரினா, கிண்டி, வடபழனி, அண்ணாநகர், சோழிங்கநல்லூர், குரோம்பேட்டை, தாம்பரம், அம்பத்தூர், கோடம்பாக்கம், கோயம்பேடு என முக்கியமான பகுதிகளில் திடீர் மழை பெய்து வருகிறது.
இதனால் தற்போது சென்னையில் சில இடங்களில் டிராபிக் ஏற்பட்டுள்ளது. நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், கோயம்பேடு, வேளச்சேரி, குரோம்பேட்டை, பல்லாவரம், அனகாபுத்தூர், பள்ளிக்கரணை, வண்டலூர், கிண்டியிலும் டிராபிக் ஏற்பட்டுள்ளது.
Comments
English summary
Sudden rain hits many parts of Chennai.
Story first published: Tuesday, June 26, 2018, 20:25 [IST]