கோடைக்கு முன்பே கொளுத்தும் வெயில் – சுட்டெரிக்கும் சூரியனால் வெயில் அளவு அதிகரிப்பு
சென்னை: கோடைக்கு முன்பே சுட்டெரிக்கும் வெயிலால் தகித்துக் கொண்டிருக்கின்றன மாவட்டங்கள்.
கிட்டத்தட்ட மயக்கம் வரும் அளவிற்கு வெயில் படுத்தி எடுத்து வருகின்றது.
அதிக வெய்யில்:
தமிழகத்தில் அதிகபட்சமாக கரூர், பரமத்திவேலூர், வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் ஆகிய இடங்களில் 104 டிகிரி வெயில் நேற்று பதிவானது.
100 டிகிரி வெய்யில்:
இதேபோல கோவை, தருமபுரி, மதுரை, பாளையங்கோட்டை, சேலம், திருச்சி, வேலூர் ஆகிய இடங்களிலும் 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவானது.
வெயில் அளவு:
வியாழக்கிழமை பதிவான வெயில் அளவு:
திருப்பத்தூர், கரூர் பரமத்தி,வேலூர் - 104
மதுரை, திருச்சி, சேலம் - 103
வேலூர், தருமபுரி, பாளையங்கோட்டை- 102
கோவை- 100
சென்னை மீனம்பாக்கம் - 97
சென்னை நுங்கம்பாக்கம் - 96
குளிர்ச்சி தரும் உணவு:
கொளுத்தும் வெய்யிலால் பல்வேறு வகையான வெப்ப நோய்கள் ஏற்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது.தண்ணீர், குளிர்ச்சியான உணவினால் மட்டுமே வெய்யில் சூட்டை தணித்துக் கொள்கின்றனர் மக்கள்.