மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே 6 ஆண்டுகளுக்கு பிறகு சிறப்பு மலை ரயில் சேவை - பயணிகள் மகிழ்ச்சி
மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே கோடை ரயில் இயக்கப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Recommended Video
கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே 6 ஆண்டுகளுக்கு பிறகு சிறப்பு மலை ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறையொட்டி கூடுதலாக ஒரு மலை ரயில் இயக்கப்படுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
2012 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கோடை ரயில் சேவை, பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டது. தற்போது 6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மலை ரயில் சேவை தொடங்கியுள்ளது.
மூன்று பெட்டிகளைக் கொண்ட இந்த ரயிலில் முதல் வகுப்பில் 32 இருக்கைகளும், இரண்டாம் வகுப்பில் 100 இருக்கைகளும் உள்ளன. ஒரே நேரத்தில் 132 பேர் இந்த ரயிலில் பயணிக்கலாம்
மேட்டுப்பாளையல் இருந்து காலை 9.10 மணிக்கு புறப்படும் ரயில் பிறப்கல் 12.30 மணிக்கு குன்னூர் சென்றடையும். துவக்க விழாவில் பயணிகளுக்கு தண்ணீர் பாட்டில் மற்றும் குளிர் பானங்கள் வழங்கப்பட்டன.
இந்த ரயில் ஜூன் மாதம் 24 ஆம் தேதி வரை சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இயக்கப்படும்.