For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அவருக்காக பெற்றோரை தூக்கியெறிந்த எனக்கு நல்ல பரிசு: நிற்கதியாய் நிற்கும் சுந்தரத்தின் மனைவி!

சுந்தரத்துக்காக பெற்றோரை தூக்கி எறிந்துவிட்டு வந்த எனக்கு நல்ல பரிசு கொடுத்துள்ளார் என அவரது மனைவி வேதனையுடன் தெரிவித்துள்ளார் .

Google Oneindia Tamil News

Recommended Video

    அவருக்காக பெற்றோரை தூக்கியெறிந்த எனக்கு நல்ல பரிசு - சுந்தரத்தின் மனைவி!- வீடியோ

    சென்னை: சுந்தரத்துக்காக பெற்றோரை தூக்கி எறிந்துவிட்டு வந்த எனக்கு நல்ல பரிசு கொடுத்துள்ளார் என அவரது மனைவி வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

    பிரியாணி கடை ஊழியரான சுந்தரத்துடன் தனது முறையற்ற உறவை தொடர இரண்டு குழந்தைகளை கொன்றுள்ளார் குன்றத்தூரை சேர்ந்த அபிராமி. குழந்தைகளையும் கணவரையும் கொன்றதால்தான் நாம் நிம்மதியாக இருக்க முடியும் என அபிராமிக்கு ஐடியா கொடுத்தவர் அவரது கள்ளக்காதலன் சுந்தரம்.

    காமவெறியால் பித்துபிடித்ததுபோல் நடந்து கொண்ட கள்ளக்காதலர்கள் சுந்தரமும்- அபிராமியும் தற்போது கம்பி எண்ணிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் எந்த பாவமும் அறியாத அவர்களை சார்ந்தவர்கள் இன்று தலையில் இடி இறங்கியதை போல் உள்ளனர்.

    விழுப்புரத்தை சேர்ந்தவர்

    விழுப்புரத்தை சேர்ந்தவர்

    இந்நிலையில் சுந்தரத்தால் பெரும் ஏமாற்றத்துக்குள்ளான அவரது மனைவி அனிதா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) இருவரின் தொடர்பு குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது, ‘எங்களது சொந்த ஊர் விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி, அம்மயபுரம் பூண்டி பகுதியாகும்.

    3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம்

    3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம்

    நானும் சுந்தரமும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். சென்னை குன்றத்தூர் கெங்கையம்மன் கோயில் தெருவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வசித்து வருகிறோம்.

    அடிக்கடி வீட்டிற்கு வருவார்

    அடிக்கடி வீட்டிற்கு வருவார்

    கடந்த இரண்டு மாதமாகத்தான் எனக்கு அபிராமியை தெரியும். அவள் அடிக்கடி எங்கள் வீட்டிற்கு வருவாள். எனது கணவனிடம் நான் கேட்ட பொழுது, எனது குடும்ப நண்பர் என்று கூறி என்னை சமாளித்தார்.

    கள்ளத்தொடர்பு தெரியாது

    கள்ளத்தொடர்பு தெரியாது

    நானும் அதனை உண்மை என்று நம்பினேன். ஆனால் அவர்களுக்குள் இப்படி ஒரு கள்ளத்தொடர்பு இருக்கும் என்று எனக்குத் தெரியாது.

    நிற்கதியாய் சுந்தரத்தின் மனைவி

    நிற்கதியாய் சுந்தரத்தின் மனைவி

    எனது கணவனை முழுமையாக நம்பி, எனது பெற்றோரைக் கூட தூக்கியெறிந்துவிட்டு அவர் பின்னாலேயே சென்னை வந்தேன். எனக்கு, இன்று எனது காதல் கணவர் நல்ல பரிசு கொடுத்துள்ளார் என கண்கள் கலங்க விரக்தியின் உச்சியில் பேசியுள்ளார் சுந்தரத்தால் நிற்கதியாய் நிற்கும் அவரது மனைவி.

    English summary
    Sundaram's wife crying for husband's betrayol. Sundaram has been jailed for illicit love with Abirami.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X