வெயிலின் தாக்கம் அதிகரிப்பு… கத்திரி வெயிலுக்கு முன்பே பிளக்கிறது
சென்னை: தமிழகத்தில் பல முக்கிய நகரங்களில் வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. அதிகபட்சமாக கரூரில் 103 டிகிரி பதிவாகியுள்ளது. அனல் காற்றும் சேர்ந்து வீசி வருவதால் சாலையில் மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது.
தமிழகத்தில் சில தினங்களுக்கு வெப்ப அலை வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது. இந்நிலையில் , தமிழகம் நோக்கி ஈரப்பதம் மிகுந்த கிழக்கு திசைக் காற்று வீசுவது குறைந்துள்ளது. அதன் காரணமாக வறண்ட மேற்குதிசைக் காற்று தமிழகம் நோக்கி வீசுகிறது. அதனால் பல நகரங்களில் வழக்கத்தை விட வெப்பம் அதிகரித்து வருகிறது.
இன்று மாலை நிலவரப்படி, அதிகபட்சமாக கரூர் 103 டிகிரி, வேலூரில் 100 டிகிரி, திருத்தணியில் 77 டிகிரி, தருமபுரியில் 99 டிகிரி,மதுரையில் 99 டிகிரி, திருச்சியில் 102, சேலத்தில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவாகியுள்ளது.
ஒரு ஹேப்பி நியூஸ்.. குமரி கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி.. 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு
வழக்கத்தை விட மூன்று தினங்களுக்கு அதிகபட்சமாக 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பநிலை உயரக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.
அதன்படி, வேலூரில் மார்ச் மாத காலகட்டத்தில் கடந்த 2010-ம் ஆண்டு அதிகபட்சமாக 105 டிகிரி வெப்பநிலை பதிவாகி இருந்தது. 8 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று 105 டிகிரி வரை வெப்பநிலை பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.