For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெருகும் ஆதரவு.. அதிகரிக்கும் மக்கள் கூட்டம்.. ஆரம்பித்தது கமல் மேஜிக்!

நடிகர் கமல்ஹாசனின் பேச்சை கேட்கும் மக்களின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    அரசியல் வானில் எம்ஜிஆரைப் போல அழிக்க முடியாத சூரியனாக மாறுவாரா கமல் ?

    சென்னை: நடிகர் கமல்ஹாசனின் பேச்சை கேட்கும் மக்களின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. இன்று மட்டுமே அவரது பேச்சை கேட்க லட்சம் பேர் கூடி இருக்கிறார்கள்.

    நடிகர் கமல்ஹாசன் ஜனவரி மாதம் 16ம் தேதி இரவு தன்னுடைய அரசியல் அறிவிப்பை வெளியிட்டார். இன்று தமது கட்சிப் பெயரை அறிவிக்க உள்ளார். ராமேஸ்வரத்தில் இருந்து தற்போது சுற்றுப்பயணத்தை தொடங்கி இருக்கிறார்.

    அங்கு உள்ள அப்துல் கலாம் வீட்டிலிருந்து அரசியல் பயணத்தை தொடங்கி இருக்கிறார். அவர் இன்று மதுரையில் அரசியல் மாநாடும் நடத்த உள்ளார்.

    குறைவு

    குறைவு

    முதலில் அவர் மதுரைக்கு வந்த போது கூட்டம் குறைவாகவே இருந்தது. அதேபோல் இரவு ராமேஸ்வரம் சென்ற போதும் பெரிய அளவில் கூட்டம் இல்லை. கமல் ரசிகர் மன்ற நிர்வாகிகள், சில பொது மக்கள், செய்தியாளர்கள் மட்டுமே இருந்தார்கள்.

    பெரிதானது

    பெரிதானது

    ஆனால் காலையில் அவர் அப்துல் காலம் இல்லத்திற்கு சென்றே போது கூட்டம் அதிகம் ஆனது. அதேபோல் அவரை சந்திக்க நூற்றுக்கணக்கில் மீனவர்கள் வந்து இருந்தார்கள். அங்கிருந்து அவர் ராமேஸ்வரம் பேக்கரும்பு பகுதியிலுள்ள அப்துல் கலாம் நினைவிடம் சென்றார். அங்கு கூட்டம் பெரிய அளவில் இருந்தது.

    மிதந்தார்

    மிதந்தார்

    இங்குதான் லட்சக்கணக்கில் அவருக்கு மக்கள் வரவேற்பு கொடுத்தார்கள். தரையில் கூட கால் வைக்க முடியாத அளவுக்கு கூட்டம் கூடியது. அதேபோல் ராமேஸ்வரத்தில் அவர் பேசுவதை கேட்கவும் கூட்டம் பெரிய அளவில் கூடியது. இன்னும் அவர் 2 இடங்களில் பேச இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    பெரிய மாநாடு

    பெரிய மாநாடு

    அதன்பின் அவர் மதுரையில் கடைசியாக பேசுவார். அவரின் முதல் மாநாட்டிற்கு பெரிய அளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது. இப்போது வரும் கூட்டத்தை பார்த்தால் மாலை இன்னும் அதிக கூட்டம் வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. சரியாக சொல்ல வேண்டும் என்றால் கமலின் முதல் மாநாடு மக்கள் வெள்ளத்தால் நிறைய போகிறது.

    English summary
    Support from people increases for Kamal's political entry. Kamalhassan discusses with his fanc club members regarding political party to be registered in EC. He says that he will indulge in politics for full time. He also says that he will continue in acting. In Rameshwaram and Madurai people gave huge support for him.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X