ஜல்லிக்கட்டு: விளம்பரத்துக்காக ஆதரவு தருவதாக கொழுப்பு பேச்சு- பீட்டாவுக்கு சூர்யா வக்கீல் நோட்டீஸ்!
படங்களின் விளம்பரத்துக்காக ஜல்லிக்கட்டை சூர்யா ஆதரிப்பதாக பீட்டா கூறியிருந்தது. இந்த கொழுப்பு பேச்சுக்கு மன்னிப்பு கேட்க கோரி பீட்டாவுக்கு சூர்யா வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
சென்னை: தம்முடைய பட விளம்பரத்துக்காக ஆதரவு தருகிறார் நடிகர் சூர்யா என பீட்டா அமைப்பினர் திமிராக பேசியிருந்தனர். இந்த திமிர் பேச்சுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்க கோர பீட்டாவுக்கு நடிகர் சூர்யா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
நடிகர் சூர்யா தொடர்ந்து ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை ஆதரித்து வருகிறார். ஆனால் பீட்டா அமைப்பின் நிர்வாகி நிகுஞ்ச் சர்மா என்பவர், பட விளம்பரத்துக்காகவே ஜல்லிக்கட்டை சூர்யா ஆதரிப்பதாக கொழுப்பாக பேசியிருந்தார்.
இதனால் சூர்யா ரசிகர்கள் கொந்தளித்தனர். இதனிடையே ஜல்லிக்கட்டு புரட்சியாளர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மதுரை, நெல்லையில் தம்முடைய சி3 பட விளம்பர நிகழ்ச்சிகளை சூர்யா ரத்து செய்திருந்தார்.
தற்போது விளம்பரத்துக்காக ஜல்லிக்கட்டை ஆதரிப்பதாக கூறிய பீட்டா, ஒரு வாரத்தில் மன்னிப்பு கேட்க கோரி வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் சூர்யா.
Actor Suriya has been sent a legal notice to PETA for defamatory statements against him.
தம்முடைய பட விளம்பரத்துக்காக ஆதரவு தருகிறார் நடிகர் சூர்யா என பீட்டா அமைப்பினர் திமிராக பேசியிருந்தனர். இந்த திமிர் பேச்சுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்க கோர பீட்டாவுக்கு நடிகர் சூர்யா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.