ரூ.20 நோட்டை தடை செய்யாத வரை எந்த சின்னமும் பிரச்சனை இல்லை.. தினகரனை வாரும் எஸ்வி சேகர்!
20 ரூபாய் நோட்டை தடை செய்யாத வரை எந்த சின்னமும் பிரச்சனை இல்லை என எஸ்வி சேகர் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: 20 ரூபாய் நோட்டை தடை செய்யாத வரை எந்த சின்னமும் பிரச்சனை இல்லை என எஸ்வி சேகர் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற டிடிவி தினகரன், குக்கர் சின்னத்தை தனது அணி தொடர்ந்து பயன்படுத்த அனுமதி கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இரட்டை இலை சின்னம் கோரி தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு வரும் வரை, தனது அணி அதிமுக அம்மா என்ற பெயரையும், குக்கர் சின்னத்தையும் தொடர்ந்து பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
டெல்லி ஹைகோர்ட் உத்தரவு
உள்ளாட்சித் தேர்தலில் தனது அணி குக்கர் சின்னத்தை பயன்படுத்தும் வகையில் தினகரன் டெல்லி உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கை தொடர்ந்தார். அவரது மனுவை விசாரணைக்கு ஏற்ற உயர்நீதிமன்றம், இதுதொடர்பாக பதில் அளிக்கும்படி தலைமை தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது.
குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாது
இந்நிலையில், தலைமை தேர்தல் ஆணையம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் நேற்று பதில் மனு தாக்கல் செய்தது. அதில், டிடிவி தினகரன் அணிக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க மாநில தேர்தல் ஆணையத்திற்கு தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட முடியாது என தெரிவித்தது.
எஸ்வி சேகர் கருத்து
ஏப்ரல் மாதத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என கூறப்படும் நிலையில் இது தினகரன் அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இந்நிலையில் பாஜக பிரமுகரான எஸ்வி சேகர் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
பிரச்சனை இல்லை
அதாவது ரூ. 20 நோட்டை தடை செய்யாத வரைக்கும் எந்த சின்னமும் பிரச்சனை இல்லை என அவர் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். தினகரன் வழக்கு செய்தியை தனது டிவிட்டர் பேஜில் ஷேர் செய்துள்ள எஸ்வி சேகர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
|
வாரிய எஸ்வி சேகர்
ஆர்கே நகர் இடைத்தேர்தலின் போது டிடிவி தினகரன் 20 ரூபாய் நோட்டை வாக்காளர்களுக்கு டோக்கனாக கொடுத்ததாக குற்றச்சாட்டு இருந்து வரும் நிலையில் எஸ்வி சேகர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.