For Quick Alerts
For Daily Alerts
Just In
தணிக்கை அதிகாரி மீது எஸ் வி சேகர் அவதூறு வழக்கு
தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் வாட்ஸ்ஆப்-பில் தகவல் பரிமாற்றம் செய்தது தொடர்பாக, தணிக்கைத் துறை அதிகாரி மீது நடிகர் எஸ்.வி.சேகர் அவதூறு வழக்கு தொடுத்தார்.
இதுதொடர்பாக சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், "மத்திய திரைப்பட தணிக்கை குழுவின் உறுப்பினராக நான் உள்ளேன். இந்த நிலையில், சென்னை மத்திய திரைப்பட தணிக்கைத் துறையின் மண்டல அலுவலராக உள்ள வி.பக்கிரிசாமி என்னை குறித்து கடந்த பிப்ரவரி 21-ஆம் தேதி கட்செவி அஞ்சல் எனப்படும் வாட்ஸ்ஆப்பில் மற்ற குழு உறுப்பினர்களுடன் தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அது எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
எனவே, அவர் மீது அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்," என தெரிவித்துள்ளார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.
Comments
English summary
Actor SV Sekar has filed a case on censor board official for sharing a comment on him in whatsapp.
Story first published: Wednesday, April 29, 2015, 10:20 [IST]