Breaking News: இன்றைய முக்கிய செய்திகள் - ஹைலைட்ஸ்!
பெண் பத்திரிக்கையாளரை அவதூறாக பேசிய விவகாரத்தில் எஸ்வி சேகர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: பெண் பத்திரிக்கையாளரை அவதூறாக பேசிய விவகாரத்தில் எஸ்வி சேகர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. பெண் பத்திரிக்கையாளர்களை அவதூறாக பேசிய விவகாரத்தில் பாஜக நிர்வாகி எஸ்வி சேகர் மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரில் அவர் எந்நேரத்திலும் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இதனிடையே இந்த விவகாரத்தில் எஸ்வி சேகர் முன்ஜாமீன் பெற முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் படிக்க...
கடல் சீற்றம்
தமிழகத்தில் இன்று முதல் 2 நாட்களுக்கு கடல் அதிக சீற்றத்துடன் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளார். கடல் அலை நெருங்கிய இடைவெளியில் 3 மீட்டர் உயரத்திற்கு எழும்பும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக ராமேஸ்வரம், தனுஷ்கோடி, கன்னியாகுமரி உள்ளிட்ட கடற்பகுதிகளில் பொதுமக்கள் இறங்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடலோர பகுதிகளில் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...
கள்ள நோட்டு
ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்குப் பின் கள்ள ரூபாய் நோட்டுகளின் புழக்கம் அதிகரித்துள்ளதாக புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்கு பிந்தைய நிதியாண்டில், கள்ள ரூபாய் நோட்டுகளின் புழக்கமும், சந்தேகத்திற்குரிய பணப்பரிமாற்றமும் அதிகரித்துள்ளது. மேலும் படிக்க...
சிகிச்சை விவரம்
ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை விவரங்கள் அடங்கிய 1000 பக்கங்கள் கொண்ட மருத்துவ ஆவணங்கள் சசிகலா வக்கீல்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...