வியாதிக்காரன் வாந்தி எடுத்தமாதிரி பேசுகிறார் எம்பி அன்வர் ராஜா.. நக்கலடிக்கும் எஸ்வி சேகர்!
போயஸ்கார்டன் ரெய்டு குறித்து கருத்து தெரிவித்த அதிமுகவினரை சரமாரியாக சாடியுள்ளார் எஸ்வி சேகர்.
சென்னை: போயஸ்கார்டன் ரெய்டு குறித்து கருத்து தெரிவித்த அதிமுகவினரை சரமாரியாக சாடியுள்ளார் எஸ்வி சேகர்.
ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்கார்டன் வேதா இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இது அதிமுக தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து ஓபிஎஸ் ஈபிஎஸ் அணியினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அவர்களை டிவிட்டர் வாயிலாக கடுமையாக சாடியுள்ளார் எஸ்வி சேகர்.
|
வியாதிக்காரன் வாந்தி எடுத்தமாதிரி
வியாதிக்காரன் வாந்தி எடுத்தமாதிரி பேச, இங்கே#அன்வர்ராஜா& குழுவினரை அணுகவும்.. என எம்பி அன்வர் ராஜா போயஸ் கார்டன் ரெய்டு குறித்து தெரிவித்த செய்தியை பதிவிட்டு நக்கலடித்துள்ளார் எஸ்வி சேகர்..
|
உங்களுக்கும் ஆட்சிக்கும் உள்ள மாதிரி
உங்களுக்கும் ஆட்சிக்கும் உள்ள மாதிரி
வருமானவரி சோதனைக்கும் அரசுக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறிய அன்வர் ராஜா எம்பியை வாரியுள்ளார் எஸ்வி சேகர்
|
கடவுளுக்கும் ரெய்டு வரும்
சட்டத்திற்கும் வருமான வரித்துறைக்கும் மரியாதை அளிக்காத எந்த இந்துமத கடவுளுக்கும் ரெய்டு வரும்... ரெய்டு குறித்து சிஆர் சரஸ்வதி கூறிய ஒன் இந்தியா செய்தியை பதிவிட்டு இவ்வாறு கூறியுள்ளார் எஸ்வி சேகர்..
|
சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு என்ன
மாண்புமிகு அம்மா கறைபடியாத கரத்துக்கு சொந்தக்காரர்- ஜெயகுமார். அப்போ சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு என்ன என கேட்டுள்ளார் எஸ்வி சேகர்
|
இது சின்ன சோதனைதான்
அஞ்சாமல் தமிழகத்திற்கு இத்தனை ஆண்டு சோதனையை கொடுத்தவர்களுக்கு இது சின்ன சோதனைதான். இதுபோல் சந்தோஷம் தொடர வேண்டும் என தெரிவித்துள்ளார் எஸ்விசேகர்..