For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சுவாதி கொலையாளி கை ரேகையுடன் நெல்லை விரைந்த சென்னை போலீஸ்! ராம்குமார் கை ரேகையுடன் ஒப்பீடு

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமாரின் கை ரேகையும், நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சம்பவ இடத்திற்கு அருகே கிடைத்த அரிவாளில் இருந்த கை ரேகையும் ஒன்றுதானா என்பதை சோதித்து பார்க்கும் பணி ஆரம்பித்துள்ளது.

கடந்த மாதம் 24ம் தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதியை வெட்டி கொலை செய்த பிறகு, சிறிது தூரம் ஓடிச் சென்று கொலை அரிவாளை தண்டவாளம் அருகே வீசிவிட்டு சென்றான் கொலையாளி.

இந்த அரிவாளில் பதிவான கை ரேகையை போலீசார், தடயவியல் நிபுணர்கள் உதவியோடு சேகரித்து வைத்துள்ளனர்.

கைது

இந்நிலையில், சுவாதியை கொன்றவன் என்ற சந்தேகத்தின் பேரில் நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே, ராம்குமார் என்பவர் நேற்று நள்ளிரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னைக்கு

சென்னைக்கு

தற்போதைய நிலையில், நெல்லையில் இருந்து சென்னைக்கு பயணம் செய்வதற்கு ஏற்ப ராம்குமார் உடல் நிலை இல்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து, அவர் சென்னைக்கு கொண்டுவரப்படுவார் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரைந்த போலீஸ்

விரைந்த போலீஸ்

கொலையாளி விட்டுச் சென்ற அரிவாளிலுள்ள கைரேகையும், ராம்குமாரின் கைரேகையும் ஒத்துப் போகிறதா என்பதை ஆய்வு செய்ய டி.எஸ்.பி. தேவராஜ் நெல்லை மருத்துவமனை விரைந்தார்.

ஆய்வு நடக்கிறது

ஆய்வு நடக்கிறது

அரிவாளில் உள்ள கைரேகையும், ராம்குமாரின் கைரேகையும் ஒத்துப் போகிறதா என்பது குறித்து ஆய்வு முயற்சி நடைபெற உள்ளது. மருத்துவமனையில் கைரேகை சோதனை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Chennai police reached Nellai to verify if Ramkumar finger print is matching with the suspect finger print.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X