பீதி கிளப்பிய பன்றிக் காய்ச்சல்- குடும்பமே தற்கொலை முயற்சி: பெற்றோர் பலி- மகன் உயிர்பிழைப்பு!!
நெல்லை: நெல்லையில் பன்றிக்காய்ச்சல் பீதியால் தந்தை, தாய்,மகன் விஷம் குடித்ததில் தந்தையும் தாயும் பலியாயினர்.
சங்கரன்கோவில் அருகேயுள்ளது சேர்ந்தமரம் கள்ளம்புளியை சேர்ந்தவர் மாணிக்கம் இவரது மனைவி சூரியகாந்தி இவர்களது ஒரே மகன் சுடலைமணி பத்தாம் வகுப்பு மாணவர். சுடலைமணிக்கு கடந்த சில மாதங்களாக கிட்னி பாதிப்பு ஏற்பட்டது. இதற்கு சிகிச்சை எடுத்துள்ளார்.
அப்போது அவருக்கு காய்ச்சல் ஏற்ப்பட்டுள்ளது.தொடர்ந்து காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளார். மருத்துவம் பார்த்தும் காய்ச்சல் நீடித்ததால் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் பன்றிக்காய்ச்சலாக இருக்கலாம் என சொல்லியுள்ளனர்.
இதனால் மனமுடைந்த தானத்தை,தாய்,மகன்.உள்ளிட்ட மூவரும் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்து, விஷம் அருந்தினர் . இதில் மாணிக்கம் நேற்றுமுன்தினம் பரிதாபமாக இறந்தார்.
சுடலைமணியும், அவரது தாயாரும் தென்காசி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்து நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இதில் தாயார் சூரியகாந்தியும் பலியானார்.தந்தையும், தாயாரும் பலியாகிவிட்ட சூழலில் மகன் சுடலைமணி சிகிச்சையில் உள்ளார்.காய்ச்சல் குறித்து அப்பகுதியினர் தவறான பயத்தை அவர்களுக்கு ஏற்படுத்தியதால் இரண்டு உயிர்கள் பரிதாபமாக பலியாகியது.இந்த சம்பவம் அப்பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.