பொதுமக்களின் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: புதிய கமிஷனர் டி.கே. ராஜேந்திரன்
சென்னை: குற்றங்கள் குறித்துப் பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் சென்னை மாநகரத்தின் புதிய காவல் ஆணையராக பொறுப்பேற்றுள்ள டி.கே.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த ஜார்ஜ் வெள்ளிக்கிழமையன்று சிறைத்துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, புதிய ஆணையராக நியமிக்கப்பட்ட டி.கே. ராஜேந்திரன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். புதிதாகப் பொறுப்பேற்றுக் கொண்ட டி.கே. ராஜேந்திரன், குற்றங்கள் குறித்துப் பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
புதிதாக பொறுப்பேற்றுள்ள டி.கே. ராஜேந்திரன், விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். மேலும், சிறைத்துறை கூடுதல் டிஜிபியாக இருந்த ஜே.கே. திரிபாதி, சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக பணியமர்த்தப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.